40% அளவில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு – முதல்வர் பெருமிதம்!
மேற்கு வங்க அரசு தற்போது அங்கு நிலவி வரும் வேலைவாய்ப்புகளை குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது. இது குறித்து மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பெருமிதம் அடைந்துள்ளார்.
வேலைவாய்ப்புகள்:
நாட்டில் தற்போது வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக பல முயற்சிகளையும் எடுத்து வருகிறது. முதலீட்டாளர்களை தங்கள் மாநிலத்தில் நிறுவனங்களை வைக்குமாறு பல மாநில முதல்வர்களும் பல சலுகைகளை அளித்து வருகின்றனர். இதனால் தங்கள் மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்ற காரணத்தால் தான் இந்த சலுகைகளை அளித்து வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இருப்பினும், நாட்டில் தற்போது புதிய வேலைவாய்ப்புகள் குறைந்து வருவது சம்பத்திய ஆய்வுகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள், இந்தியாவில், வேலைவாய்ப்பில் 40% குறைவும், வேலை நிறுவனங்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ள நிலையில், வங்காளத்தில் 40% வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், மாநிலத்தில் வறுமை குறைந்துள்ளதாகவும் பெருமிதம் அடைந்துள்ளார்.