தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் தகவல்!
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக இருக்கும் சுமார் 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் அளித்துள்ளார்.
பணியிடங்கள் நிரப்பல்
கொரோனா 2 ஆம் அலை தொற்று பரவல் குறைந்து வந்துள்ளதையடுத்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக இருக்கும் 4 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து வழித்தடங்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
இஸ்ரோ வழங்கும் தொழில்நுட்ப பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த நிகழ்வையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர், ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக இருக்கும் 4 ஆயிரம் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கியதும் பஸ் பாஸ் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் கூடுதல் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்.
தமிழகத்தின் கலை & அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 23 முதல் துவக்கம்!
தவிர கடந்த ஆட்சி காலத்தில் அரசு போக்குவரத்து துறையில் செய்யப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார். மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளின் தற்போதைய நிலை குறித்தும் சில கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார்.