திருச்சியில் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!
தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது என்றும் இதனால் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டுகளில் ஏராளமானோர் வேலையிழந்து தவித்து வந்தனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் அரசு மற்றும் தனியார் துறைகள் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியது. அதற்கான விண்ணப்ப பதிவுகளும் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மே 21ம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து குரூப் 4 & VAO தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான விண்ணப்ப பதிவு முடிவடைந்துள்ளது.
AAVIN வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – மே 25 இல் நேரடி நியமன தேர்வு!
ஜூலை 24ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. இந்த போட்டித்தேர்வுகள் மூலம் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவினர் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதனை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து அரசு பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. தற்போது உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
இதில் பங்கேற்று பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திருச்சியில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் வரும் 21 ஆம் தேதி திருச்சிக்கு வருகிறார். உயர் கல்வியை முடித்தவுடன் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்க அரசு வழிகாட்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.