ஆப்கானிஸ்தானில் பள்ளி அருகே குண்டு வெடிப்பு – 4 மாணவர்கள் பரிதாப உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் தெற்கு மாகாணமான ஹெல்மண்ட் அருகே உள்ள செயல்பட்டு கொண்டிருக்கும் இஸ்லாமிய பள்ளி மீது நேற்று முன்தினம் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனால் 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
குண்டு வெடிப்பு
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியைக் கைப்பற்றி ஒரு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் நாட்டின் பல இடங்களில் பரவலாகக் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக கடந்த மாதம் தலைநகர் காபூலில் பல குண்டு வெடுப்புகள் நடந்தது. இதனால் ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகினர். இதையடுத்து தாலிபான் ஆட்சியை எதிர்க்கும் வகையில் பல்வேறு இடங்களில் தாக்குதல்களை நடத்திக்கொண்டு வருகின்றனர். இதனால் நாட்டின் அப்பாவி பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
இதையடுத்து தாலிபான் அரசு பெண்களுக்காக வழங்கப்பட்டிருந்த அனைத்து சுதந்திரத்தையும் குறைத்துள்ளது. பெண்கள் கல்வி கற்க, வாழ்க்கை முறை உள்ளிட்டவற்றிற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இங்கு தெற்கு மாகாணமான ஹெல்மண்ட் அருகே உள்ள நாட் அலி என்ற இடத்தில் இஸ்லாமிய மாணவர்களுக்கான பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இங்கு நேற்று முன்தினம் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வெளியில் வெடிக்காத குண்டு ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
செப்டம்பர் மாதத்தில் இன்னும் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – RBI அறிவிப்பு!
இதனை தொடர்ந்து எதிர்பாராத நேரத்தில் இந்த குண்டு பயங்கரமாக வெடித்துள்ளது. இதனால் வெடி குண்டை வைத்து விளையாடிய 4 மாணவர்கள் சம்பவ இடத்தில் உடல் சிதறிய நிலையில் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தலிபான் படையினர் மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து இந்த வெடிகுண்டு எப்படி வந்தது என தலிபான் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் வேறு ஏதேனும் குண்டு உள்ளதா? என சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்