தமிழக அரசு பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா – 3 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை!
வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களுக்கு கொரோனா:
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 1ம் தேதி முதல் கட்டமாக 9 – 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆசிரியர்கள், பள்ளியிலும் பணிபுரியும் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – விவரங்கள் இதோ!
கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருந்த பள்ளிகள் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சுத்தபடுத்துதல் பணிக்காக பள்ளிக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர்.
செப்.21ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சில மாணவர்களுக்கு தொடர்ந்து சளி, காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.