தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் – ஜன.12 முதல் இயக்கம்!
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கோலாகலாமா கொண்டாடப்பட உள்ளது. இத்தகைய பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்களின் நலன் கருதி சிறப்பு ரயில்கள் இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள்:
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இத்தகைய பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் வெளியூர் சென்று வேலை பார்க்கும் மக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். அவ்வாறு சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் ஏற்ற வகையில் சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில் வசதிகளை அரசு செயல்படுத்துவது ஆண்டுதோறும் வழக்கமான ஒன்று ஆகும்.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நாளை முதல் விடுமுறை!
அந்த வகையில் தமிழகத்தில் இந்த ஆண்டும் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஜன.13ம் தேதி போகிப்பண்டிகை தொடங்கி ஜன.16 காணும்பொங்கல் வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையை மக்கள் தங்களது குடுப்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் சிறப்பு ரயில் சேவையானது வரும் ஜன.12ம் தேதி முதல் ஜன.17ம் தேதி வரை இயங்க உள்ளது.
சிறப்பு ரயில் விபரங்கள்:
1. வண்டி எண் 06001 தாம்பரம் – நெல்லை அதிவிரைவு சிறப்பு ரயில் ஜன.12ம் தேதி புதன்கிழமை இரவு 09.45க்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு நெல்லை வந்து சேரும். அதனை தொடர்ந்து வண்டி எண் 06002 நெல்லை – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜன.13ம் தேதி வியாழக்கிழமை இரவு 09.30க்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
2. வண்டி எண் 06005 சென்னை எழும்பூர் – நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் சென்னையிலிருந்து ஜன.13ம் வியாழக்கிழமை மாலை 3.30க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். அதனை தொடர்ந்து வண்டி எண் 06006 நாகர்கோவில் – சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஜன.14ம் தேதி மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
3. வண்டி எண் 06004 நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜன.16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். அதனை தொடர்ந்து வண்டி எண் 06003 தாம்பரம் – நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜன.17ம் தேதி திங்கட்கிழமை மாலை 03.45 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.
4. வண்டி எண் 06040 நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து ஜன.16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். அதனை தொடர்ந்து வண்டி எண் 06039 தாம்பரம் – நெல்லை சிறப்பு ரயில் ஜன.17ம் தேதி காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்தடையும்.