மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி 4% உயர்வு!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% வரை அகவிலைப்படி உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 38% ஆக அகவிலைப்படி உயரும். இந்த அகவிலைப்படி உயர்ந்தால் அடிப்படை சம்பளமும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டு இரண்டு கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 31% ஆக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் மேலும் 3% உயர்த்தப்பட்டு தற்போது 34% ஆக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 1.16 கோடி ஊழியர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து அகவிலைப்படி மேலும் 4% உயர்த்தப்படும் என்றும் தகவல் வெளியானது.
இந்தியாவில் முதற்கட்டமாக 13 நகரங்களில் 5G சேவை – அறிவிப்பு வெளியீடு!
இதனால் ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அத்தகைய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இடம்பெறவில்லை. இந்த நிலையில் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்ற செய்தி வந்துள்ளது. அரசின் அகவிலைப்படி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 28 அன்று வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான நிலுவைத்தொகையும் சேர்த்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவீதமாக அதிகரிக்கும். மேலும் உயர்த்தப்பட்ட 4% அகவிலைப்படி 2022 ஜூலை 1 ம் தேதியிட்டு வழங்கப்படும். இதன் மூலம் அடிப்படை ஊதியம் 18,000 பெறும் ஊழியருக்கு தற்போது வரை மாதம்தோறும் DA ரூ.6120 வழங்கப்பட்டு வருகிறது. 38 சதவீதமாக DA அதிகரிக்கப்பட்டால் ரூ.6840 வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில், இனி வரும் மாதங்களில் மாதம் 1080 ரூபாய் சம்பளத்தில் கூடுதலாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்