மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு – முக்கிய தகவல் வெளியீடு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடிய விரைவில் அகவிலைப்படி உயர்வு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், ஊழியர்களுக்கு 4% வரைக்கும் அகவிலைப்படி உயர வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடத்தில் இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. முதல் அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலும், இரண்டாவது அகவிலைப்படி உயர்வு ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடிய விரைவில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மாத சம்பளத்துடன் சேர்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும், நவராத்திரியின் மூன்றாம் நாளான செப்டம்பர் 28ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% என்கிற அளவில் அகவிலைப்படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஜூலை 1, 2022 என்கிற தேதியின் நிலவரப்படி அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு 38% ஆக இருக்கும் எனவும், இரண்டு மாத DA நிலுவைத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் கட்சிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
மேலும், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்சமாக ரூ.18,000 அளவில் ஊதியம் பெற்று வருகின்றனர். அகவிலைப்படி 4% உயர்த்தப்படும் போது மாதந்தோறும் ரூ.720 கிடைக்கிறது. அதே நேரத்தில்அதிகபட்ச வருடாந்திர சம்பளமாக ரூ.27,312 வழங்கப்படுகிறது. அகவிலைப்படி 4% உயர்த்தப்படும் போது மாதந்தோறும் ரூ.2,276 அதிகமாக கிடைக்கும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்