TNPSC யில் 4 புதிய உறுப்பினர்கள் – தமிழக அரசு நியமனம்!!
தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையத்திற்கு புதிதாக 4 உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. இவர்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்குப் பதவியில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் நியமனம்
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு நடத்தப்பட்டு பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்காணல் மூலம் பணிகள் வழங்கபடுகிறது. இந்த (TNPSC) தேர்வுகள் ஒவ்வொரு துறைகளுக்கும் ஏற்ப குரூப் தேர்வுகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையத்தில் உள்ள அதிகாரிகள் கல்வியாளர்கள் மூலம் வினாக்கள் வடிவமைக்கப்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளி ஒரு முறை தேர்வுகள் அறிவிக்கப்பட்டு தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அரசு பணிகள் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு அரசு இலவச ஆன்லைன் வகுப்புகளையும் நடத்தி வருகிறது.
சர்வதேச சுற்றுலா மையமாகும் அயோத்தி – பிரதமரிடம் அறிக்கை!!
மேலும் மாநிலம் முழுவதும் ஏராளமான (TNPSC) பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு எழுத வழிகாட்டுகின்றன. இந்த தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையத்தில் அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் தேர்வை முறையாக நடத்தும் பணியை மேற்கொள்கின்றனர். மேலும் வினாத்தாள் வடிவமைத்தல், பணியிடங்கள் எண்ணிக்கையை அறிவித்தல், தேர்வு மையங்களை கண்காணித்தல் தேர்வுவிற்கு பிறகு விடை தாள் திருத்துதல், தேர்வு முடிவை அறிவித்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு நான்கு புதிய உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது . முனியநாதன் ஐஏஸ், பேராசிரியர் கே ஜோதி சிவஞானம், முனைவர் கே அருள்மதி, ஏ.ராஜன் மரியசூசை ஆகிய 4 பேரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் பதவியேற்ற நாள் முதல் அடுத்த 6 ஆண்டு காலத்திற்கு இப்பதவியில் இருப்பார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.