YouTube மூலம் மாதம் 4 லட்ச ரூபாய் வருமானம் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உரை!
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கொரோனா காலத்தில் வீடியோ மூலம் விரிவுரைகளை வழங்கி அதனை யூடியூப்பில் பதிவேற்றம் செய்ததால் இப்போது எனக்கு மாதத்திற்கு ரூ.4 லட்சம் தருகிறது என தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தங்களது வீடுகளில் முடங்கினர். அதனால் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் யூடியூப் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதில் சாமானிய மக்கள் மட்டுமல்லாமல், சினிமா & அரசியல் பிரபலங்களும் தனக்கென ஒரு சேனல் தொடங்கி அதில் தனது வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். இந்நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி டெல்லி-மும்பை புதிய விரைவு சாலையின் முன்னேற்றம் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அக்.1 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – இலங்கை அரசு அறிவிப்பு!
அப்போது பேசிய அவர் டெல்லி-மும்பை விரைவு சாலை, சுமார் ரூ.95,000 கோடி செலவில் கட்டப்பட்டு, மார்ச் 2023 க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பான்மையான பணிகள் ஏற்கனவே ஒப்பந்தகாரர்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் தான், கட்கரி லோஹ்தகி கிராமத்தில் நடந்து வரும் திட்ட பணியின் நிலையை ஆய்வு செய்துள்ளார். அப்போது ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கொரோனா ஊரடங்கின் போது தனது அனுபவங்களை பற்றி பேசினார்.
இந்தியாவில் ட்ரோன் தயாரிப்பில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு, ரூ.5,000 கோடி முதலீடு – மத்திய அரசு!
அப்போது அவர் கூறுகையில், கொரோனா நேரத்தில் நான் இரண்டு விஷயங்களைச் செய்தேன் – நான் வீட்டில் சமைக்க ஆரம்பித்தேன், வீடியோ மூலம் விரிவுரைகளை வழங்கினேன். அந்த வீடியோக்கள் யூடியூபில் பதிவேற்றப்பட்டன. அதிகப்படியான பார்வையாளர்கள் காரணமாக எனக்கு யூடியூப் மூலமாக வருமானம் வருகிறது. தற்போது மாதம் ரூ.4 லட்சம் யூடியூப் நிறுவனம் எனக்கு தருகிறது என அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தனது சொந்த வாழ்க்கையை பற்றி பேசிய அவர் தனது மனைவியிடம் சொல்லாமல் மாமனார் வீட்டை இடிக்க உத்தரவிட்டதாக கூறினார்.