தமிழக அரசு மருத்துவமனைகளில் 4.80 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பல் – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலியாக இருக்கும் செவிலியர் உட்பட சுமார் 4.80 லட்சம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்கள் நிரப்பல்
தமிழகத்தில் தற்போது ஆட்சியமைத்துள்ளதான முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிறப்புவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் சுமார் 4.80 லட்சம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – இனி பொது இடங்களில் அனுமதி இல்லை!
அதாவது தர்மபுரி மாவட்டம் அளேதர்மபுரி பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை நேரில் பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘தமிழகத்தில் கடந்த 12 ஆம் தேதியன்று மாபெரும் தடுப்பூசி விழா நடைபெற்றது. அதில் 28.91 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலும் சுமார், 49,138 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 83 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வேடர்கள் அணியில் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தும் பார்வதி – “சர்வைவர்” ப்ரோமோ!
இதனால் அச்சப்படத் தேவையில்லை. அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். மேலும் தர்மபுரி அரசு மருத்துவமனை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செவிலியர், பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக இருக்கும் 4.80 லட்சம் இடங்கள் படிப்படியாக நிரப்பப்படும். குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றியவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.