தினசரி ஊரடங்கில் 4 மணிநேரம் தளர்வுகள் அமல் – அரசு அதிரடி உத்தரவு!
கார்கோனில் ஏப்ரல் 10 ஆம் தேதி ராம பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் அந்த பகுதி முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை போக்குவரத்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு
கார்கோனில் மத்திய பிரதேசம் கார்கோனில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ராமநவமியை முன்னிட்டு ராம பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது அந்த பக்தர்கள் மீது சில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் செய்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதில் 30 ற்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், லத்தியால் அடித்தும் கலைத்தனர்.
ExamsDaily Mobile App Download
இதனால், கார்கோன்னை சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. 10 க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை கார்கோனை சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் ஊரடங்கை பிறப்பித்தார். மேலும், கலவரத்தில் ஈடுபட்ட 159 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 106 பேர் தலைமறைவாகியுள்ளனர்.
மே மாதத்தில் 13 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இதனையடுத்து காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை போக்குவரத்து தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையிலும் கூட வாகனங்களை சாலைகளில் அனுமதிக்கவில்லை. பெட்ரோல் பங்க்குகள், நியாயவிலை கடைகளில் விற்பனையும் நிறுத்தப்பட்டது. தலைமறைவாகியுள்ள 106 பேரை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.