அரசு தேர்வின் போது 4 மணி நேரம் இன்டர்நெட் முடக்கம்? முக்கிய தகவல்!
அசாம் மாநிலத்தில் அரசு தேர்வில் நடைபெறும் முறைகேட்டை தடுப்பதற்காக அரசு புதிய யுக்தியை கையாண்டுள்ளது. அதாவது, தேர்வு முடியும் வரைக்கும் கிட்டத்தட்ட 4 மணி நேரம் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் சேவை:
அரசு தேர்வு நடைபெறும் போது என்ன தான் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் பல்வேறு முறைகேடுகள் நடக்கத் தான் செய்கின்றன. இது போல அரசு தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்கு அசாம் அரசாங்கம் முக்கிய யுக்தியை கையாண்டுள்ளது. அதாவது, அசாம் மாநிலத்தில் அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30,000 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி தேர்வு நடைபெற்றது. பலரும் அரசு தேர்வுகளில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என பல சூழ்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அரசு வேலைகளில் கை நிறைய சம்பளம், அவ்வப்போது பணி உயர்வும் வழங்கப்படுவதால் ஆயிரக்கணக்கான காலிப்பணியிடத்திற்கே லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். இதனால், இந்த தகுதி தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்காகவே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அரசு தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு அசாம் மாநிலம் முழுக்க கிட்டத்தட்ட 4 மணி நேரம் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை? கல்வித்துறை அறிவிப்பு!
அதாவது 24 மாவட்டங்களில் 4 மணி நேரம் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. மேலும், அசாம் மாநிலத்தில் கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் தேர்வெழுதினர். மேலும், அரசு தேர்வெழுதிய தேர்வு மையங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமல்லாமல் தேர்வு அறைக்குள் தேர்வு கண்காணிப்பாளரை தவிர வேறு எவரும் அவசியமில்லாமல் உள்நுழைய கூடாது எனவும், தேர்வு அறைக்கு கண்காணிப்பாளர் மொபைல் போன் எடுத்து செல்ல கூடாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்