மே 2 முதல் அடுத்த 4 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்!
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ஈதுல் பித்ரை முன்னிட்டு மே 2 முதல் மே 5ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பொது விடுமுறை என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
பொது விடுமுறை
நாடு முழுவதும் கொரோனா பேரலைத்தொற்று ஓய்ந்து வந்துகொண்டிருக்கும் வேளையில் பண்டிகைகளை கொண்டாடுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ஈதுல் பித்ரை முன்னிட்டு மே 2 முதல் மே 5ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பாகிஸ்தான் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அதாவது, ஈதுல் பித்ர் பண்டிகை மே 3ம் தேதி கொண்டாடப்படும் என்று வானியலாளர்கள் கணித்துள்ளனர்
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமரின் முக்கிய தகவல்!
அந்த வகையில் ஈதுல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 4 நாட்கள் விடுமுறை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பின்படி, ஈதுல் பித்ர் விடுமுறைகள் மே 2 திங்கள் முதல் மே 5 வியாழன் வரை அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பிரதம மந்திரி ஷாபாஸ் ஷெரீஃபுக்கு மூன்று நாட்கள் விடுமுறையை பரிந்துரைத்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தை ஆய்வு செய்த பிரதமர், நான்கு நாட்கள் விடுமுறைக்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இப்போது, இந்த ஆண்டு மே 3ம் தேதி ஈதுல் பித்ர் கொண்டாடப்படும் என்றும் ஏப்ரல் 30ஆம் தேதி இரவு முதல் மே 1ஆம் தேதி வரை நள்ளிரவு 1.28 மணிக்கு அமாவாசை பிறக்கும் என்றும் வானியலாளர்கள் கணித்துள்ளனர். மேலும், சூரியனிலிருந்து சந்திரனுக்கும் இடையேயான பரிமாண வேறுபாடு 10 டிகிரியில் இருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தானில் அது எட்டு டிகிரியில் இருக்கும். இதனால் டெலஸ்கோப் மூலம் கூட பார்க்க முடியாது என்றும் மே 2ம் தேதி மாலை அன்று தெளிவான வானம் இருந்தால், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நிலவு தெளிவாகவும் நீண்ட நேரம் பார்க்கவும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.