வாரத்தில் 4.5 நாட்கள் மட்டுமே வேலை – ஜன.1 முதல் அமல்! ஊழியர்கள் மகிழ்ச்சி!
ஐக்கிய அரபு நாடுகளில் இனிமேல் வாரத்தில் 4.5 நாட்கள் மட்டுமே வேலை நடைபெறும் என்று அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த முறை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
வாரத்தில் 4.5 நாட்கள் வேலை:
ஐக்கிய அரபு நாடுகளில் இதுவரை வாரத்தில் 6 நாட்கள் பணி நடைபெற்று வருகிறது. அதாவது ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகளான ரஸ் அல் கைமா, அபுதாபி, சார்ஜா, துபாய், அஜ்மன், உம் அல் குவைன் மற்றும் புஜைராவில் பணி நாட்களில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது வரும் ஜனவரி 1ம் தேதி முதல் வாரத்தில் 4.5 நாட்கள் மட்டும் பணியாற்றும் வகையில் புதிய பணி நேரம் மாற்றி ஐக்கிய அரபு நாடுகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
TNPSC 2022 வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியீடு – முழு பட்டியல் இதோ!
அதன்படி ஜனவரி 1ம் தேதி முதல் திங்கள் – வியாழன் காலை 7.30 மணிக்கு பணி தொடங்கி மாலை 3.30 மணி வரை என தொடர்ந்து 8 மணி நேரம் பணி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வெள்ளிக்கிழமை பணி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இனிமேல் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு வேலை தொடங்கி மதியம் 12 மணிவரை என 4.30 மணி நேரம் மட்டும் பணிபுரியும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
TN TRB தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டிச.8 முதல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தொடக்கம்!
பின்னர் வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை முடிந்ததில் இருந்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்தம் 2.5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியை அதிகரிக்கும், குடும்பத்தை கவனிக்கும் விதமாகவும் இந்த புதிய பணி நேரம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசின் இந்த அறிவிப்பு அந்நாட்டு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.