அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை!
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து உள்ளது. ஊரடங்கு காலத்திலும் வேலை முறையில் பல்வேறு மாற்றத்தை கொண்டு வந்தது. இந்த நிலையில் இது குறித்து பெல்ஜியம் நாட்டின் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரூ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வேலை முறை மாற்றம்
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை உலக நாடுகள் அமல்படுத்தினர். ஆனாலும் கொரோனா பெருந்தொற்று பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து இன்னும் வேகமாக பரவ தொடங்கியது. அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று டெல்டா வகை வைரஸை விட இரண்டு மடங்கு வேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலி! முழு விபரம் இதோ!
அதனால் உலக நாடுகளில் கடந்த 2 வருடங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. அத்துடன் பொதுமக்களின் வாழ்க்கை முறையிலும் வேலை முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் சூழலில் பல்வேறு தளர்வுகளை உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. இதில் குறிப்பாக ஊழியர்களின் பணிசுமையை குறைக்கும் வகையில் மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் LKG, UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல் – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
அத்துடன் வேலை நேரம் முடிந்த பிறகு அலுவலகம் சம்பந்தப்பட்ட அனைத்து சாதனங்களையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துக் கொள்ளலாம் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து பெல்ஜியம் நாட்டின் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரூ கூறியதாவது, பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா பாதிப்பு லேபர் சட்டங்களை தலைகீழாக மாற்றியுள்ளது. இதனை லேபர் மார்க்கெட் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு முன்னதாக அரேபிய நாடுகளில் 4 நாட்கள் வேலை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது