இந்தியாவில் 2022 முதல் வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை – PF அதிகம் கிடைக்குமா?
இந்தியாவில் வரும் 2022ம் ஆண்டு முதல் புதிய தொழிலாளர் சட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய தொழிலாளர் முறை குறித்த முழு விபரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
புதிய தொழிலாளர் சட்டம்:
இந்தியாவில் வரும் நிதியாண்டில் ஊதியம், சமூக பாதுகாப்பு, தொழில்துறை உறவுகள் மற்றும் தொழில் பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகள் குறித்த 4 தொழிலாளர் குறியீடுகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குறியீடுகளின் கீழ் டேக் ஹோம் சேலரி, வேலை நேரம் மற்றும் வார நாட்களின் எண்ணிக்கை உள்ளிட்டவைகள் மாற்றப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு இந்த புதிய தொழிலாளர் சட்டம் அமலுக்கு வந்தால் அடிப்படை ஊதியம் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் வேலை நாட்கள் வாரத்திற்கு 4 நாட்களாக மாற்றப்படும்
தமிழகத்தில் நாளை (டிச.24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும் வருங்கால வாய்ப்பு நிதி நிறுவனத்தின் பங்களிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வேலை நாட்கள் குறைவதால் தினசரி வேலை நேரம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய புதிய தொழில்துறை திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைமுறைப்படுத்த இயலவில்லை. ஏனெனில் மத்திய மற்றும் மாநிலம் என 2 அரசுகளும் இந்த 4 குறியீடுகளின் கீழ் விதிகளை அறிவித்தால் மட்டுமே நாட்டின் சட்டங்களாக மாற்ற முடியும்.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தமிழ்நாடு உதவி பெறும் ஆசிரியர் கழகம்!
இதற்கான வரைவு விதிகளை ஒரு சில மாநிலங்கள் அனுப்பியுள்ள நிலையில் பல மாநிலங்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால் வரும் நிதியாண்டில் இவை செயல்படுத்தப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த திட்டம் அமலுக்கு வந்தால் அடிப்படை ஊதியம் குறையும், PF தொகை அதிகரிக்கும். அதாவது ஒரு ஊழியரின் மாத சம்பளம் ரூ.50,000 எனில் அவரின் அடிப்படை ஊதியம் ரூ.25,000 ஆகவும், மீதி ரூ.25,000 அலவன்ஸ்களாகவும் இருக்கலாம். இவ்வாறாக அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்பட்டால் அதிக அளவில் PF கழிக்கப்படும்.