4 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல் – அரசு அதிரடி நடவடிக்கை!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இரண்டு முக்கிய அரசியல் பிரமுகர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாலக்காடு மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
4 நாட்கள் ஊரடங்கு
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள இரண்டு முக்கிய கட்சி பிரமுகர்கள் கடுமையான முறையில் வெட்டிக் கொல்லப்பட்ட நிகழ்வு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. அதாவது பாலக்காடு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாசன். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம்களில் உடற்பயிற்சி பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவர் அவரது கடையில் இருக்கும்போது திடீரென 5 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார்.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மே முதல் வாரம் தேர்வுகள் துவக்கம்!
ரத்த வெள்ளத்தில் துடித்த ஸ்ரீநிவாசனை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே ஸ்ரீநிவாசன் உயிரிழந்தார். ஸ்ரீநிவாசன் கொலை செய்யப்பட்ட விஷயம் பாலக்காடு பகுதி முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீநிவாசன் இறந்து சில மணி நேரத்திலேயே அதே கட்சியை சார்ந்த ஜுபைர் என்பவர் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது ஜுபைரை மர்மநபர்கள் காரில் வந்து சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பலியானார். மர்ம நபர்கள் வந்த காரினை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தக் காரின் உரிமையாளரும் கடந்த 2021 ஆம் ஆண்டு பாலக்காட்டில் மர்மநபர்களால் கொல்லப்பட்டவர் தான். இந்த இரண்டு முக்கிய அரசியல் பிரமுகர்களின் கொலையில் ஏதோ பெரிய மர்மம் இருப்பதாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் முழுவதும் இவர்களின் கொலை மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியதால் நேற்றிலிருந்து வரும் 20ஆம் தேதி மாலை 6 மணி வரை பாலக்காடு மாவட்டத்திற்கு மட்டும் 4 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.