வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 4 நாட்கள் சிறப்பு முகாம் – காஞ்சீபுரம் ஆட்சியர் அறிக்கை!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இந்த மாதம் 4 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக காஞ்சீபுரம் கலெக்டர் மா.ஆர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சிறப்பு முகாம்:
நாடு முழுவதும் உள்ள இந்திய குடிமகன்கள் 18 வயது நிரம்பினால் வாக்களிப்பது கட்டாயம் ஆகும். அந்த வகையில் வாக்களிக்க முதலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது கட்டாயம் ஆகும். அதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைமுறை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க இந்தியா முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் இந்த மாதம் 4 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன் படி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் இருந்தால் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். அதன்படி பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள், தொகுதி மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து வாக்குசாவடிகளில் வழங்க வேண்டும்.
தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கிய எலான் மஸ்க் – 3,700 ஊழியர்களின் பணி நீக்க நடவடிக்கை!!
Follow our Instagram for more Latest Updates
இந்த சிறப்பு முகாம் அந்தந்த பகுதிகளில் அமைந்துள்ள, கல்வி நிலையங்களில் வருகிற 12, 13, 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குபட்டியலில் பெயர் சேர்க்க முகாம்களுக்கு நேரடியாக வந்து உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய சான்று ஆவணங்களுடன் அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என காஞ்சீபுரம் கலெக்டர் மா.ஆர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.