ஜாக்கிரதை மக்களே.. தமிழகத்தில் இந்த இடங்களில் 4 நாட்களுக்கு மழை – வானிலை மையம் அறிக்கை!

0
ஜாக்கிரதை மக்களே.. தமிழகத்தில் இந்த இடங்களில் 4 நாட்களுக்கு மழை - வானிலை மையம் அறிக்கை!
ஜாக்கிரதை மக்களே.. தமிழகத்தில் இந்த இடங்களில் 4 நாட்களுக்கு மழை - வானிலை மையம் அறிக்கை!
ஜாக்கிரதை மக்களே.. தமிழகத்தில் இந்த இடங்களில் 4 நாட்களுக்கு மழை – வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதையடுத்து மேலும் 4 நாட்களுக்கு தமிழகத்திற்கு லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌ என சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்‌

தமிழக பகுதிகளில் மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் இன்று முதல் 26ம் தேதி வரை தமிழகத்தில் மேற்கு தொடர்ச்‌சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என சென்னை வானிலை மையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இன்று மீனவர்களுக்கான எச்சரிக்கையும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இன்றைய நிலவரம் குறித்து விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, 22.09.2022 மற்றும்‌ 23.09.2022, மேற்கு தொடர்ச்‌சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌.

வாகன ஓட்டிகளுக்கு இது கட்டாயம்.. மத்திய அமைச்சர் அதிரடி உத்தரவு! மீறினால் அபராதம்!

24.09.2022 முதல்‌ 26.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

Exams Daily Mobile App Download

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

22.09.2022: மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!