மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை!
மத்திய அரசு ஊழியர்களின் நலன் அடிப்படையில்,வார வேலை நாட்களை 4 நாட்களாகவும், பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி, சம்பளத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய புதிய தொழிலாளர் விதிகள் அமல்படுத்தப்படுமா என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பரபரப்பு தகவல்:
ஒவ்வொரு நாட்டிலும் வேலை செய்யும் ஊழியர்களின் நேரம் தொடர்பாக பொருளாதார கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளது. உலகத்திலேயே ஆசியா கண்டத்தில் தான் ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்கள். இந்தியாவில் தான் அனைத்து தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் தினமும் 8 மணி நேர வேலை செய்து வருகின்றனர். இந்த வகையில் ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்வதால் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட முடியாமல் போவதாக கருத்து கூறுகின்றனர். இந்நிலையை அரசு மாற்ற வேண்டும் என்றும் ஊழியர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்றும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் பிப்.15 ஆம் தேதிக்கு பின் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் நாளை மறுநாள் ஆலோசனை!
அதன்படி கடந்த 2019ம் ஆண்டு தொழிலாளர்களுக்கான 4 சட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்ற இரு அவையிலும் நிறைவேற்றியது. மேலும் தொழில்துறை உறவுகள், ஊதியம், சமூக பாதுகாப்பு மற்றும் தொழில்சார் சுகாதார பாதுகாப்பு, பணி நிலவரம் ஆகியவற்றில் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இன்னும் இதனை நடைமுறைபடுத்தவில்லை. இந்த திட்டத்தை நிறைவேற்றினால் அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இந்த விடுமுறை காரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு சேவைகளில் அதிக தாமதம் ஏற்படும் என பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் 3,803 காலிப்பணியிடங்கள் – கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை!
மேலும் தனியார் நிறுவனங்களில் இந்த திட்டத்தை அமல்படுத்தினால், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நேரம், சம்பளம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும். இந்த திட்டத்தை விரைவில் அரசு அரசு நிறுவனங்களுக்கு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், வார வேலை நாட்களை நான்காக குறைத்து, பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் திட்டம் எதையும் மத்திய அரசு பரிசீலனை செய்யவில்லை என்று கூறினார்.