ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று – பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை!

0
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று - பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை!
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று - பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை!
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று – பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளியில் நேற்று மட்டும் ஆசிரியர் மாணவர் மற்றும் பள்ளி பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு :

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 1 ம் தேதி முதல் 9 முதல் 12 வாயிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டல் படி நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளிலும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செயயப்பட்டு வருகிறது. இது பெற்றோர்களை மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மட்டுமே பள்ளி வந்துள்ளனர் அவர்களுக்கு தொற்று ஏற்படுவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ENG vs IND 5வது டெஸ்ட் – தொடரை வெல்லுமா இந்தியா? சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு?

இப்படி நாளுக்கு நாள் பள்ளி மாணவர்களுக்கு அதிகரிக்கும் தொற்றால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் இன்னும் செலுத்தப்படவில்லை அதனால் அனைத்து மாணவர்களுக்கும் தொற்று பரவும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் 5 மாணவர்கள், 6 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் ஒருவர் என மொத்தம் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – கல்வி பாதிப்பு!

செங்கம் அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அப்பள்ளிக்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், சாத்தனூர் அரசு மேல்நிலைபள்ளியில் வகுப்பு ஆசிரியருக்கும், உடற்கல்வி ஆசிரியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!