நாளை முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி விடுமுறை – வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிசம்பர் 16-ம் தேதி முதல் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் மற்றும் அதன் பிறகு வரும் வார இறுதி நாட்களில் வங்கிகளுக்கு தொடர்ந்து செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி விடுமுறை:
2021ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் (AIBOC) பொதுச் செயலாளர் சஞ்சய் தாஸ் அவர்கள் ஒரு செய்தி நிறுவனத்திடம் வங்கிகளை தனியார்மயமாக்கும் யோசனையை அரசு கைவிடாவிட்டால், இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை போல் மேலும் போராட்டங்கள் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு அலகுத்தேர்வு தொடக்கம் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!
இந்நிலையில், வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிசம்பர் 16-ம் தேதி முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தத்துக்கு வங்கி தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. இதனால் டிசம்பர் 16 (வியாழன்) மற்றும் டிசம்பர் 17 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தால் வங்கிகள் மூடப்படும். இருப்பினும், அனைத்து மாநிலங்களிலும் அல்லது பிராந்தியங்களிலும் 4 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படாது. அரசு விடுமுறை மற்றும் வங்கி வேலைநிறுத்தத்திற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும் மொத்த நாட்கள் இது ஆகும்.
ஜன.14 வரை முழு ஊரடங்கு அமல் – டிச.20 முதல் கிறிஸ்துமஸ் விடுமுறைகள் துவக்கம்! அரசு அறிவிப்பு!
இருப்பினும், மொபைல் மற்றும் இன்டர்நெட்டில் வங்கி செயல்பாடுகள் தடையின்றி இயங்கும். உங்களுக்கு ஏதேனும் முக்கிய வங்கி பணிகள் இருப்பின் அவற்றை முன்னதாக திட்டமிட்டு முடித்துக் கொள்ளலாம்.
விடுமுறை பட்டியல்:
- டிசம்பர் 16 – வங்கி வேலைநிறுத்தம்
- டிசம்பர் 17 – வங்கி வேலைநிறுத்தம்
- டிசம்பர் 18 – யு சோசோ தாமின் இறந்த நாள்: (ஷில்லாங்கில் விடுமுறை)
- டிசம்பர் 19 – ஞாயிறு