தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் 4.70% உயர்வு? அரசிடம் வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் மின் கட்டணம் 4.70 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதனை கைவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதல் மின் நுகர்வு அதிகமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில் மின்சார வாரியம் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும், இந்த முடிவை கைவிட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் 2 கோடியே 37 லட்சம் மின் நுகர்வோர்கள் இருக்கின்றனர்.
தமிழகத்தில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க சிறப்பு இயக்கம் – அரசு அதிரடி!
அவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் மாநிலத்தில் சுமார் 50 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் ஒரு கோடி பேர் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு இந்த மின் கட்டண உயர்வு சுமையை ஏற்படுத்தும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள அனுமதி காரணமாக அடுத்த மாதம் முதல் மின்கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் இந்த முடிவை கைவிட வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.