தமிழகத்தில் 3 முதல் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – கல்வி உதவித்தொகை!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் 3 முதல் 6 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு உதவி புரியும் வகையில் அரசு கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இந்த தொகையை நடப்பாண்டிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
உதவித்தொகை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதை தொடர்ந்து நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை என அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது. இந்நிலையில் தமிழக அரசு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் 3 முதல் 6 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு உதவிபுரியும் வகையில் கல்வி ஊக்கத்தொகையை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.
TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம், கல்வித்தகுதி, வயது வரம்பு! முழு விபரம் இதோ!
மேலும் கடந்த 2020-21 ஆம் கல்வியாண்டில் 3 முதல் 6ஆம் வகுப்பு வரை பயின்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி உதவித்தொகை சென்னை மாவட்டத்தை தவிர்த்து வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நடப்பாண்டுக்கான கல்வி உதவித்தொகை 2021-2022 ஆம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டின் படி 16 கோடியே 75 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் 2 லட்சத்து 64 ஆயிரத்து 898 கிராமப்புற மாணவிகள் பயன்பெறுகிறார்கள்.
CBSE ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்த கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.72000-க்கு குறைவாகவே இருக்க வேண்டும். அத்துடன் இந்த நிதியை பெற ஷெட்யூல்டு கமர்ஷியல் வங்கி என்ற வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும். அத்துடன் மாவட்ட வாரியாக உதவித்தொகை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரிகளின் வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கீழே விரிவாக அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகாரிகளுக்கு உதவித்தொகை கிடைத்ததும் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.