தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு? வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு? வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு? வலுக்கும் கோரிக்கை!

தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி தற்போது 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதையடுத்து தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அகவிலைப்படி

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதன் காரணமாக அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் அரசு நிதி நிலையை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரியில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படியை பெற்று வந்தனர். அதாவது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இது ஆறு மாத காலத்திற்கு பிறகு தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டது. அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். அதனால் தமிழகத்திலும் மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – இன்று (மே 14) முதல் கோடை விடுமுறை!

அதனால் தங்களுக்கு ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அரசு ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சிவகாசியில் அரசு ஊழியர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். அதனால் அரசு இது குறித்து ஆலோசனை மேற்கொண்டு விரைவில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!