தமிழகத்தில் தொழில் சாரா சமூக வல்லுநர் 39 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
வேலூர் மாவட்டத்தில் தொழில் சாரா சமூக வல்லுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. அதனால் கொரோனா ஊரடங்கால் வேலை இழந்தோர் மீண்டும் பணிக்கு செல்ல முயன்று வருகின்றனர். கொரோனா தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில்கள் முடங்கியதால் ஏராளமான மக்கள் வேலையிழந்து மிகவும் சிரமப்பட்டனர். கொரோனா தாக்கம் குறைந்து மீண்டும் மாநிலம் இயல்பு நிலை நோக்கி திருப்பி கொண்டிருக்கும் நிலையில் வேலையிழந்தோர் வேலைவாய்ப்புகளை தேடி வருகின்றனர்.
தமிழக அரசு, தனியார் பள்ளி தலைமை & உடற்கல்வி ஆசிரியர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில் அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் அரசு வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பாக தனியார்துறை வேலைவாய்ப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் தொழில் சாரா சமூக வல்லுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. உலக வங்கியின் உதவியுடன் தமிழக அரசின் ஊரக புத்தாக்க திட்டம் வேலூர் மாவட்டத்தில் 39 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் ஊரக தொழில் முனைவோர்களை உருவாக்குவதே ஆகும்.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – கலந்தாய்வு தேதி அறிவிப்பு! உடனே பாருங்க!
இதில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒருவர் வீதம் 39 தொழில்சார் வல்லுநர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர் 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் அவசியமாகும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்களில் இருந்து விண்ணப்பங்களை பெற்று அதை பூர்த்தி செய்து டிசம்பர் 3ம் தேதி மாலை 6 மணிக்குள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் ஒப்படைக்க வேண்டும் .