மத்திய அரசு ஊழியர்களுக்கு 39% ஆக அகவிலைப்படி (DA) உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!
சம்பள உயர்வுக்காகக் காத்திருப்போர் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்படலாம், இந்த உயர்வைத் தொடர்ந்து ஊழியர்களின் சம்பளமும் அதிரடியாக அதிகரிக்கும் என தகவல்கள் கூறுகிறது.
5% அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை உயர்த்தப்படும். ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு முறையும், ஜூலை முதல் டிசம்பர் வரை ஒரு முறையும் உயர்த்தப்படும். ஆனால், பணவீக்கத்தைப் பொறுத்து அகவிலைப்படி உயர்த்தப்படாமலும் போகலாம். 2020 ஆம் ஆண்டில் கொரோனா பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு நீண்ட நாள் காத்திருப்பிற்கு பலனாக அகவிலைப்படி உயர்வு கடந்த மார்ச்சில் 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்ந்தது. இந்த DA மற்றும் DR உயர்வு மூலம் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்தனர்.
TET தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு 2022 – ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!
இதையடுத்து ஆண்டின் இரண்டாவது அகவிலைப்படி (டிஏ) உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்துகொண்டு உள்ளனர். அகவிலைப்படி (டிஏ), அரசு ஊழியர்களின் வாழ்க்கை, செலவுகள், பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி ஜூலையில் வர உள்ளன. அதாவது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1 முதல் 5% ஆக அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Exams Daily Mobile App Download
2022 ஜனவரி மாதத்தில் அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (ஏஐசிபிஐ) 125.1 புள்ளிகளாக இருந்தது. அது பிப்ரவரி மாதத்தில் மேலும் சரிந்து 125க்கு வந்தது. இதன் அடிப்படையில் மார்ச் மாதத்திலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 புள்ளி மட்டும் உயர்ந்து 126க்கு வந்தது. மேலும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையில் அடுத்த அகவிலைப்படி உயர்வு இருக்கும். ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 5 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளது. அவ்வாறு உயர்ந்தால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.