ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகள் – 38,800 ஆசிரியர்கள் நியமனம்.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!!
இந்தியாவில் இன்று (பிப். 01) 2023 – 2024 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வருகிறது. இதில் ஏகலவ்யா மாதிரி குடியிருப்பு பள்ளிகளுக்கு 38,800 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் நியமனம்:
இந்தியாவில் 2023 – 2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் முதல் கட்ட அமர்வாக நேற்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று (பிப்.01) மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார்.
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு திறன் வளர் பயிற்சி – திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநர் தாக்கல்!!
Follow our Instagram for more Latest Updates
இதில் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாட்டில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப்பள்ளிகளை தொடங்கியது. தற்போது நாடு முழுவதும் 780 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளிகளில் 3.5 லட்சம் மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமானோர் வேலைவாய்ப்பை பெற்று பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.