தமிழக அரசின் நல்லாசிரியர் விருது – 385 ஆசிரியர்கள் தேர்வு!
தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றி வரும் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட இருக்கிறது. இதற்கு தேர்தெடுக்கப்பட்ட 385 ஆசிரியர்களின் பெயர் பட்டியல் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நல்லாசிரியர் விருது
தமிழக பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களிடையே சிறப்பான பங்களிப்பை கொடுத்து வரும் ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த கல்வியாண்டில் பயிற்றுவித்து வரும் ஆசிரியர்களில் சிலருக்கு, டாக்டர் ராதா கிருஷ்ணன் பிறந்த தினத்தில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதுக்காக தேர்தெடுக்கப்பட்டுள்ள சுமார் 385 ஆசிரியர்களது விவரங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் ஆசிரியர் தினத்தன்று விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் ஒரே நாளில் 45,352 பேருக்கு கொரோனா உறுதி – 366 பேர் உயிரிழப்பு!
இது தவிர விருதுடன் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணமும், வெள்ளி பதக்கமும் கொடுக்கப்பட உள்ளது. அதன் படி, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் 171 ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் 171 ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளிகளின் 37 ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளிகளின் 2 ஆசிரியர்கள், சமூக பாதுகாப்பு துறை பள்ளியின் 2 ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி ஆசிரியர் என மொத்தம் 385 பேர் விருதுகளை பெற உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 ஆசிரியர்களுக்கு மட்டும் இன்று (செப்டம்பர் 3) நடைபெற இருக்கும் நிகழ்வில் முதல்வர் முக ஸ்டாலின் விருதுகளை வழங்க இருக்கிறார். மற்ற ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த கல்வியாண்டுக்கான நல்லாசிரியர் விருதுகள் இளைய தலைமுறை ஆசிரியர்களுக்கு அதிகளவு வழங்கப்பட இருக்கிறது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.