Wipro நிறுவனத்தில் 38000 பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!

0
Wipro நிறுவனத்தில் 38000 பேருக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!
Wipro நிறுவனத்தில் 38000 பேருக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!
Wipro நிறுவனத்தில் 38000 பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு!

இந்தியாவில் முன்னணி IT நிறுவனங்களில் இரண்டாவது இடத்தில் விப்ரோ நிறுவனம் உள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனம், இந்த ஆண்டில் சுமார் 38,000 பிரஷர்களுக்கு வேலை கொடுப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

38 ஆயிரம் பேருக்கு வேலை:

கொரோனா வருகையால், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்த்த ஊழியர்கள் பலர் தங்களது வேலையையும் சம்பளத்தையும் இழந்தனர். இருப்பினும் நிறையப் பேருக்கு வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வசதி கிடைத்தது. இந்நிலையில், தற்போது கொரோனா பிரச்சனைகள் குறைந்து இயல்புநிலை திரும்பியுள்ளதால் ஐடி துறையிலும் புதிய வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு போன்ற விஷயங்களில் நிறுவனங்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.அந்த வகையில் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ இந்த நிதியாண்டில் 38,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்த இருப்பதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதன் அடிப்படையில் 2021-22 நிதியாண்டில் கூட 19,000 பேருக்கு மட்டுமே வேலை கொடுத்திருந்த நிலையில், இந்த ஆண்டில் இரு மடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனத்தில் தற்போது 2.43 லட்சம் பேருக்கு மேல் வேலை பார்க்கும் நிலையில், அடுத்த ஆண்டில் இன்னும் அதிகப் பேருக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனம் 40,000 பேருக்கும், இன்ஃபோசிஸ் நிறுவனம் 50,000 பேருக்கும் வேலை கொடுக்கத் திட்டமிட்டுள்ளன. இருப்பினும், இந்த நிறுவனத்தின் தேய்மானம் என்பது கவலையான போக்காக மாறிக்கொண்டிருக்கிறது. ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறும் அட்ரிசன் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், புதிதாக ஆட்களைச் சேர்ப்பதில் நிறுவனங்கள் மும்முரமாக உள்ளன.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் கோடை விடுமுறை? அமைச்சர் அறிவிப்பு!

அந்த வகையில் கடந்த நிதியாண்டின் தொடக்கத்தில் 15.5 சதவீதத்திலிருந்து அட்ரிஷன் விகிதம் தற்போது 23.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த தேய்மானத்தைக் கட்டுப்படுத்த, விப்ரோ நிறுவனம் தனது இளைய ஊழியர்களுக்கான காலாண்டு பதவி உயர்வுகளை வழங்கி இருக்கிறது. இதற்கிடையில் விப்ரோ நிறுவனம் கடந்த நிதியாண்டில் 2.72 பில்லியன் டாலர் வருவாயைப் பெற்றுள்ளதாகவும், இது தொடர்ச்சியாக 3.1 சதவீதம் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு ஆண்டு 34.2 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தலைமை மனிதவள அதிகாரி தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!