Post Office இல் தேர்வு இல்லாமல் 38,926 பேருக்கு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
Post Office இல் தேர்வு இல்லாமல் 38,926 பேருக்கு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Post Office இல் தேர்வு இல்லாமல் 38,926 பேருக்கு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Post Office இல் தேர்வு இல்லாமல் 38,926 பேருக்கு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

போஸ்ட் ஆபீஸ் வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (BPM) உதவி தபால் அலுவலர் (ABPM) மற்றும் தபால் ஊழியர் (DakSevak) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிய நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு:

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (BPM) உதவி தபால் அலுவலர் (ABPM) மற்றும் தபால் ஊழியர் (DakSevak) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, நாடு முழுவதும் மொத்தம் 38,926 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

அரசு பேருந்துகளில் 19.5% டிக்கெட் கட்டண உயர்வு அமல் – பொதுமக்கள் அவதி!

இந்த வகையில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. மேலும் தபால் அலுவலர் (BPM) பணிக்கு தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.12,000 சம்பளம் வழங்கப்படும். இதை அடுத்து உதவி தபால் அலுவலர் மற்றும் தபால் ஊழியர் (ABPM/DakSevak) பணிக்கு ரூ.10,000 சம்பளம் வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download

10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே தேர்வு எதுவும் கிடையாது. இதை அடுத்து, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2022 ஆகும். இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

  • கிளை தபால் அலுவலர் (BPM) பதவி என்பது அலுவலகம் சார்ந்த பணிகளை செய்யும் வேலையாகும்.
  • உதவி கிளை தபால் அலுவலர் (ABPM) பதவி என்பது அலுவலகம் மற்றும் களப்பணி இரண்டையும் செய்யக் கூடிய வேலையாகும்.
  • டக் சேவக்ஸ் (தபால் ஊழியர்) பதவி என்பது முழுமையாக களப்பணி சார்ந்தது. அதாவது தபால் விநியோகம் செய்யும் வேலையாகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!