10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் தேர்வில்லாத வேலை – 38,926 காலிப்பணியிடங்கள்!
இந்திய அஞ்சல் துறையில் 38000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பாணியிடங்கள் உள்ளதாகவும், அதில் தகுதியான நபர்களை கொண்டு நிரப்ப உள்ளதாகவும் அஞ்சல் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளை விரிவாக இப்பதிவில் பற்றி பார்ப்போம்.
வேலைவாய்ப்பு
இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தபால் அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் கிராம தபால் ஊழியர் மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் உள்ளிட்ட பதவிகளில் 38,926 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தமிழகத்தில் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
இப்பணியில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதுடன் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருந்தவராக இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். ஆனால் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கிராம தபால் ஊழியருக்கு 12,000 ரூபாயும் மற்றும் உதவி கிராம தபால் ஊழியருக்கு 10,000 ரூபாயும் மாத சம்பளமாக வழங்கப்படும். இதில் தகுதியான நபர்கள் அவர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
Exams Daily Mobile App Download
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://indiapostgdsonline.