Wipro நிறுவனத்தில் 38,000 பேருக்கு வேலைவாய்ப்பு – 2023ம் நிதியாண்டில் திட்டம்! முழு விவரம் இதோ!
இந்தியாவின் 2வது மிகப்பெரிய IT நிறுவனமான விப்ரோ நடப்பு நிதியாண்டில் சுமார் 38,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே, தற்போது வரை இந்நிறுவனத்தின் தேய்மானம் 23.8% ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
IT வேலைவாய்ப்பு
பெங்களூரை தளமாகக் கொண்ட மென்பொருள் நிறுவனமான விப்ரோ 2023ம் நிதியாண்டில் 38,000 புதியவர்களை பணியமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது, முந்தைய நிதியாண்டில் இந்நிறுவனம் பணியமர்த்திய 19,000 புதியவர்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இப்போது தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவைகள் அதிகரித்துள்ளதால் விப்ரோ நிறுவனம் பணியமர்த்தலின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது. முன்னதாக, முந்தைய வருவாய் அழைப்பில் விப்ரோ நிறுவனம் 17,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
இதனை தொடர்ந்து 23ம் நிதியாண்டில் சுமார் 30,000 பேரை வேலைக்கு அமர்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதே போல விப்ரோவின் போட்டி நிறுவனங்களான TCS, இன்போசிஸ் மற்றும் HCL Tech ஆகியவையும் தங்கள் புதிய பணியமர்த்தல் திட்டங்களை அதிகரித்துள்ளன. அந்த வகையில் இந்த நிதியாண்டில் 40,000, 50,000 மற்றும் 45,000 பேர் இந்நிறுவன வளாகங்களில் பணியமர்த்தப்பட இருக்கின்றனர். தற்போது வரை விப்ரோவில் சுமார் 2,43,128 பேர் பணியாற்றுகின்றனர்.
Exams Daily Mobile App Download
இருப்பினும், இந்த நிறுவனத்தின் தேய்மானம் என்பது கவலையான போக்காக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த நிதியாண்டின் தொடக்கத்தில் 15.5 சதவீதத்திலிருந்த அட்ரிஷன் விகிதம் தற்போது 23.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த தேய்மானத்தைக் கட்டுப்படுத்த, விப்ரோ நிறுவனம் தனது இளைய ஊழியர்களுக்கான காலாண்டு பதவி உயர்வுகளை வழங்கி இருக்கிறது. இதற்கிடையில் விப்ரோ நிறுவனம் கடந்த நிதியாண்டில் 2.72 பில்லியன் டாலர் வருவாயைப் பெற்றுள்ளதாகவும், இது தொடர்ச்சியாக 3.1 சதவீதம் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு ஆண்டு 34.2 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தலைமை மனித வள அதிகாரி சௌரப் கோவில் குறிப்பிட்டுள்ளார்.