மாண்டாஸ் புயலால் ஏற்பட்ட சேதம் – மீனவர்களுக்கு ரூ,35,000 நிவாரணத்தொகை.. முதல்வர் உத்தரவு!
வங்கக்கடலில் உருவான மாண்டாஸ் புயல் நேற்று இரவு கரையை கடந்தது. இந்த புயலின் தாக்கத்தால் சேதமடைந்த மீனவர்களின் படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க முக. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நிவாரணம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில் கடந்த வாரம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல மெல்ல வலுவடைந்து டிச.8ம் தேதி புயலாக உருமாறியது. இந்த புயலால் தமிழகம் மற்றும் புதுவையின் அநேக இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
நேற்று சென்னை அருகே சுமார் 150 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த புயல் இரவு புதுவை மற்றும் ஸ்ரீ ஹரிகோட்டா அருகே பலத்த காற்றுடன் கரையை கடந்தது. இந்த புயலால் கடற்கரை பகுதிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சில நாட்களில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை புரட்டி போடும் மழை.. இவங்கெல்லாம் கவனமா இருக்கனும் – மருத்துவர்கள் அறிவுரை!
Exams Daily Mobile App Download
மேலும் புயலால் சேதமடைந்த மீனவர்களின் படகுகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதன் படி முழுமையாக சேதமடைந்த கட்டுமரத்திற்கு ரூ. 32,000, பகுதியாக சேதமடைந்த படகுகளுக்கு ரூ.10,000 நிவாரணமாக வழங்கப்படும். இதனை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.