எமிரேட்ஸ் நிறுவனத்தில் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்ப்பு!
எமிரேட்ஸ் நிறுவனத்தில் 3,500 பேரை பணியில் அமர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு:
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமான மக்கள் வேலையிழந்து தவித்தனர். பல நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. தங்கள் ஊழியர்களுக்கு வேலை அளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். வெளிநாடுகளில் பணி புரிந்தவர்கள் அனைவரும் வேலை இல்லாத காரணத்தால் தங்கள் தாயகம் திரும்பினர். அனைத்து நாடுகளும் கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டன. அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி தொற்றை குறைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் எலி மருந்து, பால்டாயில் விற்பனைக்கு கட்டுப்பாடு – தற்கொலை தடுப்பு நடவடிக்கை தீவிரம்!
பல நாடுகள் இயல்பு நிலையை நோக்கி திரும்பி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அனைத்து நாடுகளும் மீண்டும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மற்ற நிறுவனங்களை தொடர்ந்து இந்நிலையில் துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கும் உலகின் முன்னணி விமான எமிரேட்ஸ் நிறுவனம் 3,500 பேரை புதிதாக வேலையில் சேர்க்க உள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை – தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலகம் முழுவதும் பெரும்பாலான விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் அந்த நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தற்போது நீண்ட விடுமுறையில் அனுப்பப்பட்ட ஊழியர்களையும் மீண்டும் அழைத்துள்ளது. வேலைவாய்ப்பு பெற www.emiratesgroupcareers.com என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.