தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.3,500 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு சார்பாக மாதந்தோறும் மூத்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2021-22 ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை விண்ணப்பங்கள்:
தமிழக அரசு மாதம் தோறும் மூத்த தமிழறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.3,500 உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகையானது அவர்களின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான உதவித்தொகையை பெற விரும்பும் மூத்த தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்று தேசிய மருத்துவர்கள் தினம் – பிரதமர் மோடி உரை!
இந்த அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது, தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை பெற விரும்புபவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் 1.1.2021 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அவர்களின் ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழியில் பெறப்பட்ட வருமான சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான சான்று மற்றும் தமிழ் பணி ஆற்றி வருவதற்கான தகுதி நிலை சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த திட்டம் மூலம் மூத்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகையாக ரூ.3,500 மாதந்தோறும் வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
அத்துடன் மருத்துவ படி ரூ.500 அவர் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். உதவித்தொகை பெற விரும்புபவர்கள் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தமிழ் வளர்ச்சி அலுவலகத்தில் ஜூலை 10 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.