Post Office இல் மாதம் ரூ.1411 முதலீடு செய்தால் 35 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!

0
Post Office இல் மாதம் ரூ.1411 முதலீடு செய்தால் 35 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் - சூப்பரான சேமிப்பு திட்டம்!
Post Office இல் மாதம் ரூ.1411 முதலீடு செய்தால் 35 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் - சூப்பரான சேமிப்பு திட்டம்!
Post Office இல் மாதம் ரூ.1411 முதலீடு செய்தால் 35 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!

இந்திய தபால் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கிராம் சுரக்ஷா திட்டத்தில் இணைவதற்கான குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

கிராம் சுரக்ஷா திட்டம்

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்களில் இழப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்து வந்தனர். அதனால் பொதுமக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான முறையிலும் அதிக லாபத்தை தரும் வகையிலும் சேமிக்க தொடங்கினர். அதில் குறிப்பாக அஞ்சல் சேமிப்பு திட்டங்களில் முதலீடுகளை அதிகளவு செலுத்தி வருகின்றனர். ஏனெனில் இதில் முதலீடு செய்வதன் மூலமாக குறைந்த முதலீட்டில் அதிக வட்டி தொகை கிடைக்கிறது. அத்துடன் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அஞ்சல் அலுவலகம் இயங்குவதால் முதலீட்டாளர்களுக்கு 100% பாதுகாப்பு கிடைக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு DA மற்றும் HRA மேலும் 3% உயர்வு – விரைவில் அறிவிப்பு!

அதனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும் இதில் முதலீடு செய்து அதிகம் பயன்பெறுகின்றனர். தற்போது கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் கிராம சுரக்ஷா திட்டத்தை அஞ்சல் துறை கொண்டு வந்துள்ளது. இத்திட்டமானது கிராமப்புறங்களில் உள்ள நலிந்த பிரிவினர் மற்றும் பெண் தொழிலாளர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 19 வயது முதல் 55 வயது நிரம்பியவர் வரை சேமிப்பு கணக்கை தொடங்க முடிகிறது. மேலும் இதில் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் என்ற தங்களுக்கு உகந்த கால அளவில் செலுத்தி கொள்ளலாம்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு – சத்துணவு வழங்க அரசாணை வெளியீடு!

அத்துடன் கிராம் சுரக்ஷா யோஜனா அல்லது கிராம் சுரக்ஷா திட்டத்தில் மாதம் 1500 ரூபாய் முதலீடு செய்தால் முதிர்வு காலம் முடியும் போது 35 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடிகிறது. இதில் பிரீமியம் தொகையை செலுத்த 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தில் 19 வயதுடைய முதலீட்டாளர் மாதந்தோறும் ரூ.1515 செலுத்தினால் முதிர்வு காலம் முடியும் போது 55 வயதில் ரூ. 31.60 லட்ச வரை சேமிக்கலாம். இதனை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் மாதந்தோறும் ரூ.1411 செலுத்த வேண்டும். இதன் முதிர்வு காலம் முடிவடையும் நிலையில் 34.60 லட்ச ரூபாய் சேமிக்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!