அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் 34% அகவிலைப்படி (DA) உயர்வு – சூப்பர் அறிவிப்பு!

0
அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் 34% அகவிலைப்படி (DA) உயர்வு - சூப்பர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் 34% அகவிலைப்படி (DA) உயர்வு - சூப்பர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் 34% அகவிலைப்படி (DA) உயர்வு – சூப்பர் அறிவிப்பு!

தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை 34% என உயர்த்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட DA தொகை ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வர இருக்கிறது.

அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசை போலவே, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோரது அகவிலைப்படியை 34 சதவிகிதம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஊழியர்களுக்கு தற்போதுள்ள 31 சதவிகிதத்திற்கு பதிலாக மூன்று சதவிகிதம் அதிகரித்து 34% DA ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 2022 முதல் அமலுக்கு வரும் வகையில் கூடுதல் தவணை DA நிலுவைத் தொகை ஏப்ரல் மாதத்தில் பணமாக வழங்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திடீர் மின்வெட்டு ஏன்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

இது குறித்து நிதி ஆணையர் (கூடுதல் தலைமைச் செயலாளர்) அடல் டல்லூ பிறப்பித்த உத்தரவின்படி, ‘நவம்பர் 17, 2021 தேதியிட்ட அரசு ஆணை எண் 304-எஃப் 2021 இன் தொடர்ச்சியாக, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் கீழ் வழக்கமான ஊதிய நிலைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு தற்போதுள்ள அடிப்படை ஊதியத்தின் 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதத்தில் திருத்தப்பட்ட விகிதத்தில் அகவிலைப்படி வழங்கப்படும். இந்த திருத்தப்பட்ட விகிதம் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ExamsDaily Mobile App Download

மேலும், திருத்தப்பட்ட ஊதிய அமைப்பில் ‘அடிப்படை ஊதியம்’ என்பது 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி ஊதியக் குழுவில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் பெறப்படும் ஊதியத்தைக் குறிக்கிறது. ஆனால் சிறப்பு ஊதியம் போன்ற வேறு எந்த வகை ஊதியமும் இதில் சேர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரவின்படி, ஜனவரி, 2022 முதல் நடைமுறைக்கு வரும் DAன் கூடுதல் தவணைக்கான நிலுவைத் தொகை, ஏப்ரல் 2022ல் அரசு ஓய்வூதியம் பெறுவோர் அல்லது குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரொக்கமாக வழங்கப்படும் என்றும் ஏப்ரல் முதல் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்தின் ஒரு பகுதியாக மாறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!