மாநில அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு – அகவிலைப்படி (DA) 34% ஆக உயர்வு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு - அகவிலைப்படி (DA) 34% ஆக உயர்வு!
மாநில அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு – அகவிலைப்படி (DA) 34% ஆக உயர்வு!

சத்தீஸ்கர் மாநில அரசுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி (DA) உயர்வுக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மே முதல் ஜூன் மாதத்திற்குள் 3 சம தவணைகளில் நிலுவைத்தொகை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DA உயர்வு

சத்தீஸ்கர் மாநில அரசு, தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி மிகப்பெரிய நிவாரணத்தை அளித்ததோடு மட்டுமல்லாமல் மீண்டும் ஒரு பெரிய அறிவிப்பை வழங்கியுள்ளது. அதாவது, சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்களுக்கு தற்போது அகவிலைப்படி தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு நேற்று (ஏப்ரல்.26) வெளியிடப்பட்ட நிலையில் புதிய உத்தரவின்படி, அகவிலைப்படி தொகை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.600 லிருந்து ரூ.2500 வரையுள்ள உயர்வு ஊழியர்களின் கணக்கில் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இந்த உயர்த்தப்பட்ட DA பலனை 16000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பெறு உள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்ட உத்தரவின்படி, ஏப்ரல் 1, 2016 முதல் ஊதிய விகிதத்தைப் பெறும் சத்தீஸ்கர் மாநில மின் நிறுவனத்தில் பணிபுரியும் 31 சதவீத வழக்கமான அலுவலர்கள் அல்லது ஊழியர்கள் மற்றும் பணிச்சுமை கொண்ட ஊழியர்களின் தற்போதைய அகவிலைப்படி விகிதம் ஜனவரி 1ஆம் தேதியன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 1, 2022 முதல், ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை ஊதியத்தில் இந்த 34% தொகை அகவிலைப்படியாக வழங்கப்பட இருக்கிறது.

அதே வேளையில், மின் நிறுவனங்களில் ஏப்ரல் 1, 2009 முதல் ஊதிய விகிதப்படி சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தற்போதைய அகவிலைப்படி 196 சதவீதத்தில் இருந்து அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆறாவது ஊதிய விகிதத்தை பெறும் ஊழியர்களின் டிஏவும் 7% உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சத்தீஸ்கர் மாநில பவர் கம்பெனியின் ஊதியத் திருத்தத்தின் கீழ், ஏப்ரல் 1, 2014 முதல் திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தைப் பெறும் அதிகாரி ஊழியர்களுக்கு ஜனவரி 1, 2022க்குப் பிறகு 47% லிருந்து 51% DA உயர்த்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதே போல ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் ஓய்வு பெறும் மின்வாரிய ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் அவர்கள் ஓய்வு பெறும் மாதம் வரை வழங்கப்படும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது, ஏப்ரல் மாத சம்பளத்துடன் வழக்கமான கொடுப்பனவுகள் மற்றும் வழங்கப்படும் என்றும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான அகவிலைப்படி நிலுவை ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான சம்பளத்துடன் மூன்று சம தவணைகளில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!