மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 34% அகவிலைப்படி அதிகரிப்பு!
இந்தியாவில் மத்திய அரசு பணியாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக 31% உள்ள அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் அதிகரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
அகவிலைப்படி உயர்வு:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் குறைந்த பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் அகவிலைப்படி 11% உயர்த்தப்பட்டு மொத்தம் 28% ஆக அதிகரிக்கப்பட்டது. பிறகு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயா்வால் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் அமலுக்கு வரும் இரவு ஊரடங்கு? இன்று வெளியாகும் அறிவிப்பு!
மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டும் என்று மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது 2022 புத்தாண்டு பரிசாக தற்போது மேலும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 34 சதவீத அகவிலைப்படி கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஓமைக்ரான் தொற்றால் ஜல்லிக்கட்டுக்கு தடை – தமிழக அரசுக்கு பீட்டா கடிதம்! மீண்டும் எழுந்த சர்ச்சை!
இந்த அகவிலைப்படி உயர்வின் படி அடிப்படை சம்பளம் ரூ.18,000 எனில் 34% அகவிலைப்படிவின் ரூ.6,120 சம்பளம் கூடுதலாக கிடைக்கும். அடிப்படை சம்பளம் ரூ.56,900 எனில் 34 சதவீத அகவிலைப்படி உயர்வின் படி ரூ.19,346 கூடுதல் தொகையாக ஊழியருக்கு கிடைக்கும். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.