அரசு ஊழியர்கள் மற்றும் தினசரி கூலிகளின் சம்பளம் 33% உயர்வு – அதிரடி அறிவிப்பு!
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளின் தற்காலிகத் தொழிலாளர்கள் உட்பட தினக்கூலிகளின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.300 ஆக அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
ஊதியம் அதிகரிப்பு
தற்போது, ஜம்மு காஷ்மீரின் பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரியும் தினக்கூலிகள் தங்களது அன்றாட சம்பளத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கு 33% உயர்வு பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, தொழிலாளர் அமைச்சகத்தால் குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் திருத்தப்படும் வரை இடைக்கால நடவடிக்கையாக அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள தற்காலிகத் தொழிலாளர்கள் உட்பட தினக்கூலிகளின் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு நாளைக்கு ரூ.225 லிருந்து ரூ.300 ஆக உயர்த்துவதற்கு வேலைவாய்ப்பு துறை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளார்.
ExamsDaily Mobile App Download
இது குறித்து துறை மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தினக்கூலிகள் யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சியில் முன்மாதிரியான அர்ப்பணிப்பு மற்றும் வேலைக்கான அர்ப்பணிப்புடன் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகின்றனர். அதனால் பணியாளர்களின் கணிசமான பகுதியினருக்கு பயனளிக்கும் வகையில் இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தினக்கூலிகளின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இதனுடன் நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலவும் குறைந்தபட்ச ஊதியத்தின் ஒப்பீட்டு அறிக்கையை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தயாரித்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்போது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் குறைந்தபட்ச ஊதியத்தை அறிவிக்கும் செயல்முறை குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஆகும் என்பதால், அனைத்து அரசுத் துறைகளிலும், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள தினக்கூலிகள் பயனடையும் வகையில் இடைக்கால நடவடிக்கைகளுக்கான முடிவு எடுக்கப்பட்டது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.