தமிழகத்தில் 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 33 திட்டங்கள் – முதல்வர் ஒப்புதல்!

0
தமிழகத்தில் 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 33 திட்டங்கள் - முதல்வர் ஒப்புதல்!
தமிழகத்தில் 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 33 திட்டங்கள் - முதல்வர் ஒப்புதல்!
தமிழகத்தில் 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 33 திட்டங்கள் – முதல்வர் ஒப்புதல்!

தமிழகத்தில் இன்று முதல்வர் முன்னிலையில் ரூ.17,297 கோடி மதிப்பிலான 33 திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இந்த ஒப்பந்தங்கள் மட்டும் இல்லாமல் 14 திட்டங்களுக்கு முதல்வர் அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார்.

திட்டங்கள் ஒப்புதல்:

தமிழகத்தில் கடந்த மே 7 ஆம் தேதி முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மக்களுக்கான பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். குறிப்பாக கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000, நகர பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணம் உள்ளிட்ட முக்கிய நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

தமிழக அரசு வருவாய்த் துறையில் 3000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் அறிவிப்பு!

மேலும் அரசு துறைகளில் காலியாக உள்ள பல பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறு தமிழகத்தின் வளர்ச்சி பணிகளுக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் முக ஸ்டாலின் வடிவமைத்து வருகிறார். அந்த வரிசையில் இன்று ரூ.17,297 கோடி மதிப்பிலான 33 திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல் 14 திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

முதல்வராக பொறுப்பேற்று 2 மாதங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அவர் எடுத்துள்ளார். மேலும் நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மேகதாது அணை விவகாரம் போன்றவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். மற்றொரு பக்கம் மாநில வளர்ச்சி குழுவை மறுசீரமைக்க அனைத்து துறைகளையும் வளர்ச்சி பாதையில் பயணிக்க பல திட்டங்களை அறிவித்து வருகிறார். தொடர்ந்து தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டு புதிய தொழிற்சாலைகளையும், நிறுவனங்களையும் ஏற்படுத்தி உள்ளார்.

TN Job “FB  Group” Join Now

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. சென்னை கிண்டியில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 33 தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. குறிப்பாக ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் 54 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!