இந்தியாவில் சுமார் 32 லட்சம் ஊழியர்கள் வேலையிழப்பு!
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 32 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார கணிப்பு தகவல் தெரிவித்துள்ளது.
வேலையிழப்பு:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து மாநில அரசுகளும் முழு ஊரடங்கை அறிவித்தது. இந்த ஊரடங்கானது அடுத்தடுத்து தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், சிறு குறு வணிக நிறுவனங்கள் சாலையோர கடைகள் என அனைத்து இயங்க மாநில அரசுகள் தடை விதித்தது. இதனால் இந்தியா முழுவதும் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 32 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார கணிப்பு தகவல் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் 1.21 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – இந்திய ஐடி நிறுவனங்களின் சாதனை!
நிறுவனங்கள் முடங்கியதால் ஊழியர்களுக்கு பணி வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, போன்ற வணிகம் சார்ந்த எந்த வேலைகளும் நடைபெறாததால் உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியதால் ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். மாத ஊதியமின்றி வாழ்க்கையை நடத்துவது பெரும் சவாலாக உள்ளது என வேலை இழந்தவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கொரோனா பரவலை காரணம் காட்டி வேலை தர மறுக்கின்றனர் எனவும் கூறுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்த வேலை இழப்பால் நாடும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்தியா முழுவதும் ஜூன் மாத இறுதியில் மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை 7.97 கோடியாக இருந்தது. இந்த நிலையில் தொற்று பரவல் அச்சத்தால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதன் விளைவாக மாத சம்பளம் பெரும் ஊழியர்களின் எண்ணிக்கை 7.64 கோடியாக சரிந்துள்ளது என இந்திய பொருளாதார கணிப்பு தகவல் தெரிவித்துள்ளது.