டெல்லியில் ஒரே நாளில் 305 பேருக்கு கொரோனா உறுதி – 44 பேர் பலி!
தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 75,133 பரிசோதனைகளில் 305 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 44 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா நிலவரம்:
கொரோனா இரண்டாம் அலை தலைநகர் டெல்லியில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது. மாநில அரசு நோய் பரவலை தடுக்க தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டது. கொரோனா இரண்டாம் அலையால் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்தது. அதனால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தலைநகர் டெல்லி கொரோனா பரவல் மையமாக மாறியது.
9 மற்றும் 11ம் வகுப்பு இறுதி தேர்வுகள் ரத்து – அரசு அறிவிப்பு!!
சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ குழுகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தடுப்பு பணிகள் மேற்கொண்டது. கொரோனா நோயாளிகள் அதிகரித்த காரணத்தால் டெல்லி மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை நிலவியது. படுக்கை வசதிகளும், ஆக்ஜிசன் வசதிகள் இல்லாமலும் நோயாளிகள் உயிரிழந்தனர். பின்னர் அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகள் காரணமாக தொற்று பாதிப்பு மிகப்பெரிய அளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த 24 மணி நேரத்தில் 305 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 75,133 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு 0.41 சதவீதமாக சரிந்துள்ளளது. ஒரே நாளில் 560 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 14,01,473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டெல்லியில் 14,30,433 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 44 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 24,748 பேர் நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.