காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிக்கை!!
தமிழ்நாடு அரசு வருவாய்துறைக்கு கீழ் கிராமங்களில் உள்ள 3000 காலி கிராம அலுவலர் பணிகளை நிரப்ப வேண்டும் என பா.ம.கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
3000 காலிப்பணியிடங்கள்:
நம் இந்திய நாட்டின் அடிப்படை ஆதாரமாக விளங்குபவை கிராமங்கள்.இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள கிராமங்களின் வளர்ச்சி உள்ளது. இன்று இந்தியாவின் வளர்ச்சி என்பது அனைத்து கிராமங்களின் ஒன்றிணைந்த வளர்ச்சியில் தான் அடங்கியிருக்கிறது.ஒரு கிராமம் சிறப்பாக வளர்ச்சி பெற அங்கே ஒரு சிறந்த நிர்வாக கட்டமைப்பு தேவையாக இருக்கிறது.எனவே காலியாக உள்ள கிராம நிர்வாக பணிகளை உடனே நிரப்ப வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
Stage II NTSE தேர்வு ஒத்திவைப்பு – NCERT அறிக்கை!!!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாடு அரசின் வருவாய்துறைக்கு கீழ் உள்ள 3000 கிராம நிர்வாக காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அரசின் அச்சாணியாக உள்ள கிராம நிர்வாக பணிகள் நிரப்ப படாமல் பல மாதங்கள் இருப்பது குறித்து வருத்தம் தெரிவித்தார்.
தமிழக அரசு எடுக்கும் தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை கிராம நிர்வாக அலுவலர் செய்கிறார். இதனால் தமிழ்நாடு அரசு நிர்வாகம் தடையின்றி செயல்படும். ஆனால் இந்த பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளது.
ஆகையால் கிராம நிர்வாக அலுவலர்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தொகுதி-4 பணிக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். விரைவாக போட்டி தேர்வுகளை நடத்தி கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்