3,000 பள்ளிகள் மூடல் – மாநில கல்வித்துறையின் அதிரடி நடவடிக்கை! ஆசிரியர்கள் அதிர்ச்சி!
உத்தரகாண்ட் மாநிலத்தில் 3,000 பள்ளிகளை தற்காலிகமாக மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில பொதுக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பள்ளிகள் மூடல்:
இந்தியாவில் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு செய்யப்பட்டு அதற்கேற்றவாறு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. இந்த புதுமைகளின் விளைவை பொறுத்து திட்டங்கள் தொடரப்பட்டும் வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 3,000 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அம்மாநிலத்தில் 10 அல்லது அதற்கும் குறைவான மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளை மூட கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மலை பகுதிகள் மற்றும் சமவெளிகளில் 10க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படும் என்று அம்மாநில பொதுக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
TANCET 2023 தேர்வு தேதிகள் தள்ளிவைப்பு – அண்ணா பல்கலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
Exams Daily Mobile App Download
போதிய மாணவர்கள் இல்லாத காரணத்தால் மட்டுமே பள்ளிகள் மூடப்படுகிறது. தற்போது மூடப்படவுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிறந்த பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்கள். அதே பள்ளிகளில் ஆசிரியர்களும் மாற்றப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதே போல பள்ளிகள் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.