மாதம் ரூ.100 முதலீடு செய்தால் ரூ.3000 வரை வருமானம் – விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம்!
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜ்னா திட்டம் விவசாயிகளுக்கு ஓய்வு காலத்தில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இத்திட்டத்தில் கிடைக்கும் பலன்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சேமிப்பு திட்டம்
இந்தியாவில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக விவசாயிகளுக்கு உதவி புரியும் வகையில் பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக விவசாயிகள் தங்களின் 60வது வயதில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிலையான வருவாயாக பெற முடிகிறது. இந்த தொகை அவர்களின் ஓய்வு காலத்தில் ஆதரவு அளிக்கும் வகையில் உள்ளது.
தபால் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை இன்று முதல் தொடக்கம் – கடைசி நாள் மார்ச் 4 !
இந்த திட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் இணைந்து கொள்ள தகுதி உடையவர்கள் ஆக கருதப்படுகிறார்கள். இதில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம். விவசாயிகள் விவசாயத்திற்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வயதான பிறகு விவசாயிகளுக்கு சிறு சேமிப்பு இல்லையென்றால் மிகவும் பொருளாதார ரீதியில் சிரமப்படுவார்கள். அதனால் முதுமை காலத்தில் ஆண், பெண் என அனைவருக்கும் மாதந்தோறும் பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜ்னா திட்டத்தின் கீழ் ரூ.3000 வரை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் 29 வயதுடைய நபர் கணக்கை தொடங்கும் போது ரூ.100ஐ முதலீடாக செலுத்த வேண்டும். இதில் மத்திய அரசும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து அவர்களின் 60 வயதில் மாதந்தோறும் ரூ.3,000 தொகையை வழங்குகிறது. அதாவது இத்திட்டத்தின் பலனை 20 ஆண்டுகளுக்கு பிறகு தான் முழுவதுமாக பெற முடியும். அதனால் இந்த திட்டம் விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருப்பதால் இத்திட்டம் பற்றி பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.