தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு சட்டக் கல்லூரிகளில் படித்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் சீர்மிகு சட்ட கல்லூரிகளில் படித்த வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை:
தமிழகத்தில் சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் அவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது. முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னர் இவர்கள் இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். அதன் பிறகே வழக்கறிஞர்களாக முடியும். கிராம பகுதியில் உள்ள ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த பயிற்சி காலத்தில் உதவும் வகையில் அரசு உதவித்தொகையை வழங்குகிறது.
தமிழகத்தில் ஜிகா வைரஸ் பரவல்? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்!
இந்த உதவித்தொகை ரூ.3000 அரசு சட்டக் கல்லூரியில் படித்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சீர்மிகு சட்டக் கல்லூரியில் படித்து வெளிவரும் இளைஞர்களுக்கும் இரண்டு ஆண்டுகள் உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் அரசு சட்டக் கல்லூரி என்பது அரசு நிதியுதவியால் நடத்தப்படுவது எனவும், அந்த வகையில் சீர்மிகு சட்டப்பள்ளியில், அரசால் நிர்வகிக்கப்படுவதால், அதுவும் அரசு சட்டக் கல்லூரி தான். எனவே சீர்மிகு சட்ட கல்லூரியில் படித்து வழக்கறிஞர்களாக பதிவு செய்கிறவர்கள் மற்றும் பிற நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு அவர்களின் பயிற்சி காலத்திற்கு உதவும் வகையில் அரசு ரூபாய் 3000 உதவித்தொகை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.