மாநகராட்சியில் இதற்காக ரூ.1000 முதல் ரூ.3000 வரை அபராதம் – அதிரடி உத்தரவு!!
கிருஷ்ணகிரியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனை தடுக்கும் விதமாக சாலைகளில் திரியும் மாடுகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க உள்ளதாக ஓசூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.
அபராதம் விதிப்பு:
சென்னை மாநகராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சாலை போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் சுற்றி திரிகின்றன. இவைகளை சுகாதாரத் துறையினர் பிடித்து புதுப்பேட்டை, பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்கின்றனர். அதன்பின்பு இந்த மாடுகளின் உரிமையாளர்களிடம் ரூ.1,550 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஆனால் இது போன்று தற்போது அதிக அளவில் மாடுகள் சுற்றித் திரிந்து வருவதாக புகார்கள் எழுந்தது. அதனால் இதனை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் முதற்கட்டமாக, மாடுகளின் உரிமையாளர்களை அழைத்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் மண்டல அளவில் கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் மாடுகள் சாலையில் திரிவதை தடுக்கும் பொருட்டு அபராத தொகையானது நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Twitter பயனர்களுக்கு இனி வெவ்வேறு கலரில் டிக் – வெளியான முக்கிய தகவல்!
Exams Daily Mobile App Download
இதையடுத்து இது போன்று கிருஷ்ணகிரியிலும் ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதனால் இதனை தடுக்கும் விதமாக ரூ.1000 முதல் ரூ.3000 வரை அபராதம் விதிக்க முடிவு செய்ய உள்ளதாக ஓசூர் மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி இனி சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.